அமெ­ரிக்க சட்டம்: ஏற்­று­ம­தி­யா­ளர்கள் ‘கிலி’அமெ­ரிக்க சட்டம்: ஏற்­று­ம­தி­யா­ளர்கள் ‘கிலி’ ... இரண்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இரண்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ...
2 ஆண்­டு­களில் முன்­னேற்றம்; பிர­தமர் மோடி அர­சுக்கு 10க்கு 7 மதிப்பெண் ‘அசோசெம்’ அமைப்பு பாராட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2016
08:05

புது­டில்லி : ‘கடந்த இரு ஆண்­டு­களில், பிர­தமர் மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசின் பணி­களில் நல்ல முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது’ என, இந்­திய வர்த்­தக கூட்­ட­மைப்­பான – ‘அசோசெம்’ பாராட்டு தெரி­வித்­துள்­ளது.
கடந்த, 2014, மே 26ல் மத்­தியில் ஆட்சிப் பொறுப்­பேற்ற, பிர­தமர் மோடி தலை­மை­யி­லான, தேசிய ஜன­நா­யக கூட்­டணி அரசு, நாளை­யுடன், இரண்டு ஆண்­டு­களை பூர்த்தி செய்­கி­றது. இந்த இரு ஆண்­டு­களில், மத்­திய அரசின் செயல்­பா­டுகள் குறித்து, அசோசெம், பல்­துறை வல்­லு­னர்­களின் கருத்­து­களை கேட்­ட­றிந்து, அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.
அதன் விவரம்: மத்­திய அரசின் செயல்­பா­டு­களில், நல்ல முன்­னேற்றம் காணப்­ப­டு­கி­றது. சாலைகள், நெடுஞ்­சா­லைகள், ரயில்வே, எரி­சக்தி துறை­களில், துணிச்­ச­லாக பல முடி­வுகள் எடுக்­கப்­பட்­டன. நாட்டின் ஒட்­டு­மொத்த பொரு­ளா­தாரம், வலு­வான வளர்ச்சிப் பாதையில் நடை­போட்டு வருகிறது. இந்­தி­யாவின் வெளி­யு­றவு கொள்கை, அடிப்­படை கட்டமைப்பு துறைகள் ஊக்­கு­விப்பு ஆகி­ய­வற்றில், மோடி தலை­மை­யி­லான அரசு, மிகச் சிறப்­பாக செயல்­பட்­டுள்­ளது. குறிப்­பாக, நெடுஞ்­சா­லைகள், மின்­சாரம், ரயில்வே உள்­ளிட்ட முக்­கிய, அடிப்­படை கட்­ட­மைப்பு துறை­களில் மேற்­கொண்­டுள்ள பணிகள் பாராட்­டுக்­கு­ரி­யவை. அடுத்து, விவ­சாயம் மற்றும் கிரா­மப்­புற மேம்­பாட்டு திட்­டங்­களில் தீவி­ர­மாக கவனம் செலுத்த வேண்டும். இரு ஆண்­டு­க­ளுக்கு முன் இருந்­ததை விட, நாட்டின் பொரு­ளா­தாரம், தற்­போது மேலும் ஸ்திர­ம­டைந்து, வலுப்­பெற்­றுள்­ளது.
ரூபாய் மதிப்பின் சரிவை தடுத்து, நடப்பு கணக்கு பற்­றாக்­குறையை குறைத்து, திவால் சட்டம், ரியல் எஸ்டேட் சட்டம் போன்ற முக்­கிய சட்ட சீர்­தி­ருத்­தங்­களை அறி­மு­கப்­ப­டுத்­திய வகையில், மத்­திய நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகி­யோரின் பணி பாராட்­டுக்­கு­ரி­யது. பொது துறை நிறு­வ­னங்­களின் பங்கு விற்­பனை, வரி பிரச்னை, வேளாண் சீர்­தி­ருத்­தங்கள் ஆகி­ய­வற்றில், வேகம் தேவை. முக்­கி­ய­மாக, சரக்கு மற்றும் சேவை வரியை விரைந்து அமல்­ப­டுத்த வேண்டும் என, அனைத்து துறை­யி­னரும் எதிர்­பார்க்­கின்­றனர். இந்த ஆய்வின் அடிப்படையில், மத்­திய அரசின், இரண்டு ஆண்டு கால செயல்பாடு களை பாராட்டி, 10க்கு 7 மதிப்­பெண்கள் வழங்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுஉள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)