பதிவு செய்த நாள்
25 மே2016
07:41
மும்பை : வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களை வைத்துள்ள இந்திய நிறுவனங்கள், தற்போது, போக்கு வரத்து உரிமத்திற்கான, பரிசீலனைக் கட்டணமாக, மாதம், 20 ஆயிரம் ரூபாய் செலுத்தி வருகின்றன. இந்த நடைமுறையில், உரிமம் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, கப்பல் போக்குவரத்து அமைச்சகம், இந்திய கப்பல் நிறுவனங்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ‘இனி, வெளிநாடுகளில் கப்பல்களை பதிவு செய்துள்ள, இந்திய நிறுவனங்கள், சரக்கு போக்குவரத்து உரிமத்திற்கான பரிசீலனைக் கட்டணத்தை, ஒரு முறை செலுத்தினால் போதும்’ என, கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது. இந்தியாவில், சுலபமாக தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தற்போதைய நடவடிக்கை, இந்திய கடல்சார் வர்த்தகத்தை மேலும் சுலபமாக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|