தங்கம் விலை கிடுகிடு… மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.736 அதிகரிப்புதங்கம் விலை கிடுகிடு… மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.736 அதிகரிப்பு ... ‘அடுத்த 3 மாதங்­க­ளுக்கு நிலக்­கரி சுரங்க ஏலம் இல்லை’ ‘அடுத்த 3 மாதங்­க­ளுக்கு நிலக்­கரி சுரங்க ஏலம் இல்லை’ ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பிரிட்டன் முடிவால் கருப்பு வெள்ளியான உலக பங்குச்சந்தைகள் : இந்திய பங்குச்சந்தைகளில் ரூ.1.79 லட்சம் கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2016
17:50

மும்பை : ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற இருப்பதன் செய்தி எதிரொலியாக இந்திய உள்ளிட்ட உலக பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டதால் முதலீட்டாளர்களுக்கு இன்றைய தினம் கருப்பு வெள்ளியாக மாறியது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 52 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருத்துள்ளனர், இதனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுகிறது. இதனால் பிரிட்டனின் பவுண்ட் மதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.39 பவுண்ட்டாக சரிந்தது. மேலும் பிரிட்டனின் இந்த முடிவால் இந்திய பங்குச்சந்தைகள் மட்டுமல்ல, ஆசியா, ஐரோப்பிய உள்ளிட்ட உலகளவிலும் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இதனால் இன்றைய தினம் உலகளவில் பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளியாக அமைந்தன.
இன்றைய தினம் பங்குச்சந்தைகள் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பித்தன. நேரம் செல்ல செல்ல ரூபாயின் மதிப்பு சரிந்ததன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. ஒருக்கட்டத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், நிப்டி 300 புள்ளிகளும் சரிந்தன. இருப்பினும் வர்த்தகம் முடியும்தருவாயில் சில முக்கிய நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவிலிருந்து சற்று மீண்டது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 604.51 புள்ளிகள் சரிந்து 26,397.71-ஆகவும், நிப்டி 181.85 புள்ளிகள் சரிந்து 8,088.60-ஆகவும் முடிந்தன. இந்திய பங்குச்சந்தைகளில் இன்று ஏற்பட்ட சரிவால் மட்டும் முதலீட்டாளர்களின் மொத்த சொத்து மதிப்பில் ரூ.1.79 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 23 நிறுவன பங்குகள் சரிந்து முடிந்தன. குறிப்பாக டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பாரத் ஃபோர்க், இன்போசிஸ், டிசிஎஸ்., உள்ளிட்ட நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)