பதிவு செய்த நாள்
25 ஜூன்2016
07:29
புதுடில்லி : ‘‘அடுத்த, இரண்டு – மூன்று மாதங்களுக்கு, நிலக்கரி சுரங்க ஏலம் கிடையாது,’’ என, மத்திய நிலக்கரி துறை செயலர் அனில் சுவார்ப் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:தற்போது, நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான போட்டி குறைந்து உள்ளதால், நிலக்கரி சுரங்கம் ஏலம் விடுவதற்கு இது சரியான நேரம் இல்லை. இதனால், அடுத்த இரண்டு – மூன்று மாதங்களுக்கு நிலக்கரி சுரங்க ஏலம் விடப்பட மாட்டாது. முன்னதாக, மத்திய அரசு, 16 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கு முடிவு செய்தது. இதன் மூலம் நிலக்கரி உற்பத்தி கூடுதலாக, 4 கோடி டன் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டது.
அந்த, 16 சுரங்கங்களில் எட்டு சுரங்கங்கள் எந்த மாநிலத்தில் உள்ளதோ, அந்த மாநில அரசுகளுக்கும்; எஞ்சிய எட்டு, பிற மாநில அரசுகளுக்கும் ஒதுக்க திட்டமிடப்பட்டது. மாநில அரசுகளுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்வதற்கான டெண்டர், ஏப்., 21ம் தேதி நடக்க இருந்தது. தற்போது, அந்த டெண்டர், ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|