பதிவு செய்த நாள்
25 ஜூன்2016
07:30
புதுடில்லி : கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 1,11,236 கோடி ரூபாயாக இருந்தது. அதில், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பங்கு, 36.97 சதவீதமாகும். இதில், 50 சதவீத பங்களிப்பைக் கொண்ட, திருப்பூர், 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் விலகுவதால், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி பாதிக்கப்படும் என, திருப்பூர் ஆயத்த ஆடை துறையினர் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சக்திவேல் கூறுகையில், ‘‘பிரிட்டன் விலகுவதால் ஆயத்த ஆடை துறைக்கு ஏற்படும் தாக்கம் தற்காலிகமானது. கூட்டமைப்பில் இருந்தபோது, இந்திய ஆயத்த ஆடைகள் துறைக்கு முழுமையாக ஆதரவளிக்க முடியாத நிலையில், பிரிட்டன் இருந்தது. இனி, பிரிட்டன், முன் அளித்ததை விட, இந்தியாவிற்கு அதிக ஆதரவு தரும் என்பதால், நீண்ட கால அடிப்படையில், நல்ல பயன் கிடைக்கும்,’’ என, தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|