பதிவு செய்த நாள்
25 ஜூன்2016
07:31
புதுடில்லி : ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், அடுத்த வாரம் முதல், ஆர்ஜியோவின் மூலம், ‘4ஜி’ சேவையை வழங்க உள்ளது.ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், 80 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, சி.டி.எம்.ஏ., தொழில்நுட்ப தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு, ‘4ஜி’ சேவையை ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் மூலமாக வழங்க முடிவு செய்து உள்ளது. அதன்படி, முதல் கட்டமாக மும்பை, டில்லி, கோல்கட்டா, குஜராத், ஆந்திரா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், உ.பி., ஒடிசா, ம.பி., பீஹார் மாநிலங்களில், அடுத்த வாரம், ‘4ஜி’ சேவையை வழங்க உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம், கேரளா, கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், மத்திய அரசின் அனுமதியை பொறுத்து, ஜூலை மாத இறுதியில் இருந்து வழங்க திட்டமிட்டு உள்ளது. ரிலையன்ஸ், ‘4ஜி’ சேவையின், 10 ஜி.பி., கட்டணம், 93 ரூபாய் என்ற விலையில் இருந்து துவங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|