பதிவு செய்த நாள்
27 ஜூன்2016
07:33
பிள்ளைகளின் கல்வியை பெற்றோர் முக்கியமாக கருதுகின்றனர் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால், இதற்காக இந்திய பெற்றோரில் பெரும்பாலானோர் கடன்படவும் தயாராக இருப்பது தெரிய வந்துள்ளது.எச்.எஸ்.பி.சி., நிறுவனம், இந்தியா உள்ளிட்ட, 15 நாடுகளில் உள்ள பெற்றோரிடம், கல்வியின் மதிப்பு பற்றிய கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்ற இந்திய பெற்றோரில், 71 சதவீதம் பேர், பிள்ளைகளின் உயர் கல்விக்காக தாங்கள் கடன்பட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் உயர் கல்வியை விரும்பும் பெற்றோர் மத்தியில் இது, 76 சதவீதமாக இருக்கிறது.மேலும், இந்தியாவில் உள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் உயர் கல்விக்காக, ஆண்டுதோறும், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் சராசரியாக செலவு செய்கின்றனர். அதே போல, உயர் கல்விக்காக சேமித்து வைத்திருக்கும் பழக்கம் கொண்டவர்கள் அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பெரும்பாலான பெற்றோர், கல்வி பற்றிய நிதி முடிவுகளை அவர்கள் சிறு வயதிலேயே மேற்கொள்ளத் துவங்கி விடுகின்றனர் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதே நேரத்தில் உயர் கல்விக்கான நிதியை திரட்டுவது, குடும்பத்தின் மற்ற நிதி முடிவுகளை பெருமளவு பாதிப்பதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|