பதிவு செய்த நாள்
02 ஜூலை2016
08:29
புதுடில்லி : ‘‘வங்கித் துறையில் சீர்திருத்தம் செய்வதாக கூறி, பொது துறை வங்கிகளை இணைப்பதால், எந்த பயனும் ஏற்படாது,’’ என, மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின், சர்வதேச திட்டப் பிரிவு தலைவர் ருச்சர் சர்மா தெரிவித்துள்ளார்.வங்கி இணைப்பு நடவடிக்கை, பொது துறை வங்கிகள் தனியார் மயமாவதை மேலும் தாமதப்படுத்தும். வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு அஞ்சியே, மத்திய அரசு, இணைப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. இந்தியா, தனியார் மயமாக்கல் என்ற சொல்லையே, மோசமானதாக கருதுகிறது. கண்துடைப்புக்காக, தனியார் மயமாக்கல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.இந்தியாவில், பொது துறை வங்கிகள் அவசியம் என்ற போதிலும், அவை, தனியார் வங்கிகளுடன் சமதள போட்டியை சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டும். வாராக்கடன், கடன் வளர்ச்சியில் மந்தநிலை போன்ற பிரச்னைகளுக்கு, பொது துறை வங்கிகளில், அரசின் பங்கு முதலீடு குறைந்தால் தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|