பதிவு செய்த நாள்
28 ஜூலை2016
05:18
திருவனந்தபுரம் : நடப்பாண்டில், கேரளாவுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை, 8 சதவீதம் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 2015ம் ஆண்டில், கேரளாவுக்கு வெளிநாடுகளில் இருந்து, 9.77 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். இது, 2014ம் ஆண்டை விட, 5.86 சதவீதம் அதிகமாகும். இதே காலத்தில், உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை, 6.59 சதவீதம் உயர்ந்து, 1.24 கோடியாக அதிகரித்து உள்ளது. இதுகுறித்து, கேரள சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி நாடுகளில் இருந்து மட்டுமின்றி, தற்போது, ஐக்கிய அரபு நாடுகள், ரஷ்யாவில் இருந்தும் வர துவங்கி உள்ளனர். அரசு, சுற்றுலா பயணிகளை ஈர்க்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், நடப்பாண்டில், கேரளாவுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, 8 சதவீதம் அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|