பதிவு செய்த நாள்
29 ஆக2016
06:39
பர்சனல் பைனான்ஸ் என பிரபலமாக குறிப்பிடப்படும் தனிநபர் நிதியில் வழிகாட்டும் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. சேமிப்பு, செல்வம், முதலீடு மற்றும் அவை தொடர்பான நிதி கோட்பாடுகளை இவை வலியுறுத்துகின்றன.
இந்த புத்தகங்களுக்கு மத்தியில் தனிநபர் நிதி என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வழிகாட்டுகிறது பீட்டர் ஜே.சாண்டர் எழுதியுள்ள, ‘தி எவ்ரிதிங் பர்சனல் பைனான்ஸ்’ புத்தகம்: தனிநபர் நிதி என்பது, உங்களைப் பற்றி மற்றும் உங்கள் நிதி தொடர்பானது. தனிநபர் நிதி என்பது, காசோலைகளை மாற்றுவது,பில்களை செலுத்துவது மட்டும் அல்ல. ஆரோக்கியமான நிதி பழக்கங்கள் மூலம், உங்கள் குடும்பத்தின் இலக்கு மற்றும் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான செல்வத்தை சேர்ப்பதே தனி நபர் நிதி.பணம் தொடர்பான உங்கள் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் அணுகுமுறையை மீறி, பணம் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும், எளிமை யாக்கவும் கூடியது. பொருளாதார நோக்கில் பணமும் ஒரு பண்டகம் தான். இது வினோதமாக தோன்றலாம். ஆனால் பணமும், அதன் மூலம் நாம் வாங்கும் ஒரு பண்டம் போன்றது தான். பணம் இருப்பதால் மட்டுமே ஒருவர் செல்வத்துடன் இருப்பதாக கூற முடியாது. நிதி நோக்கில் ஆரோக்கியமாக இருப்பதே தனிநபர் நிதியின் நோக்கம். தனிநபர் நிதியில் பொதுவான சில பிரச்னைகள் இருக்கின்றன.
அதிகம் செலவு செய்வது, எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளுக்கு ஏற்ப திட்டமிடாதது, இலக்குகளுக்கு ஏற்ப செயல்படாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பது, உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை மேற்கொள்வது ஆகிய பிரச்னைகளை நாம் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும்.இதில் சில முக்கியமான கோட்பாடுகளும் இருக்கின்றன. முதலில் பணம், வருமானம் மற்றும் செல்வம் மூன்றும் ஒன்றல்ல. எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பதை விட, எவ்வளவு பணம் சேமித்து வைத்து முதலீடு செய்கிறீர்கள் என்பதே முக்கியம். அதே போல நிதி சாதனங்களை விட பழக்கவழக்கங்களே முக்கியமானவை. மேலும் தனிநபர் நிதி என்பது முழு நேர பணியாகும். முக்கியம் என்ன என்றால், செல்வத்தை சேர்ப்பதற்கான, காப்பாற்றுவதற்கான வழிகளை அறிந்திருக்க வேண்டும். செல்வத்தை இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ள எப்படி செலவிட வேண்டும் என்றும் அறிந்திருக்க வேண்டும்.
தனிநபர் நிதி, பட்ஜெட் போட்டு செலவு செய்வது, செலவுகளை கட்டுப்படுத்துவது, வங்கி அமைப்புகளை அறிவது, முதலீட்டு சாதனங்களை அறிந்திருப்பது மற்றும் ரிஸ்க் நிர்வாகம் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கிறது. அவசர கால திட்டமிடல் மற்றும் ஓய்வு கால திட்டமிடல் ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும்.வாழ்க்கை சூழல் மற்றும் நிலைகளுக்கு ஏற்ப இந்த சாதனங்களை கொண்டு சிறந்த நிதி திட்டமிடலை உருவாக்க வேண்டும். இதற்கு உங்கள் நிதித்தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். நிதி இலக்கு மற்றும் நிதி வெற்றியை அடைவதற்கான அணுகுமுறை மற்றும் பழக்கங்களே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|