பதிவு செய்த நாள்
31 ஆக2016
23:55
லண்டன் : பிரிட்டனைச் சேர்ந்த, சி.ஐ.எம்.ஏ., நிறுவனம், நிதி சார்ந்த செயல்பாடுகளில், செயற்கை நுண்ணறிவுடன் செயல்படக் கூடிய, ‘ரோபோ’வின் பயன்பாடு குறித்து, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த, 3,000 நிதி நிறுவன அலுவலர்களிடம் கருத்து கேட்டது. இதில், 75 சதவீதம் பேர் ஆதரவுடன், ஜிம்பாப்வே முதலிடத்திலும்; 67 சதவீதம் பேருடன், சீனா இரண்டாவது இடத்திலும்; 64 சதவீதத்தினருடன், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த ஆய்வில், பெரும்பான்மையானோர், ‘அலுவலகங்களில் ரோபோ பயன்படுத்துவதால், பணிகளில் மாற்றம் இருக்குமே தவிர, கணக்காளர்கள் மற்றும் இதர வல்லுனர்களின் வேலைகள் பறிப்போகாது’ என, தெரிவித்து உள்ளனர்.‘அலுவலகங்களில், செயற்கை நுண்ணறிவுள்ள ரோபோ பயன்பாடு பெருகினால், பணித்திறன் அதிகரிக்கும்; பணிச்சூழல் மேம்படும்’ என, ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில், 50 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|