பதிவு செய்த நாள்
02 செப்2016
13:58
புதுடில்லி : பண்டிகை காலம் துவங்கி உள்ளதை அடுத்து உள்நாட்டு கார் உற்பத்தி 16 சதவீதத்தை கடந்துள்ளது. இரு வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது, டில்லியில் 2000 சிசி டீசல் கார்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது ஆகிய காரணங்களால் வாகன விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 2.78 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் வாகன விற்பனை 3 மில்லியனை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அதிக வாகன விற்பனை செய்த நிறுவனங்களில் மாருதி சுசுகி, மகேந்திரா அண்ட் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. கியர் வாகன விற்பனையில் மாருதி சுசுகி, ஹூண்டாய், மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஹோண்டா, டாடா மோட்டார்ஸ் முன்னிலையில் உள்ளன.
இதே போன்று இருசக்கர வாகன விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப். ஹோண்டா, டிவிஎஸ் மோட்டார்ஸ், ராயல் என்பீல்ட், யமஹா ஆகிய நிறுவனங்கள் டாப் 5 இடங்களில் உள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|