பதிவு செய்த நாள்
14 செப்2016
06:03
புதுடில்லி:காதி மற்றும் கிராம தொழில் ஆணையம், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரிது பெரி, வடிவமைத்துக் கொடுத்த ஆடை வகைகளை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, ஆணையத்தின் தலைவர் வி.கே.சக்ஸேனா கூறியதாவது:இந்த ஆடையின் விலை, 1,299 ரூபாய் ஆகும்; அணிவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். விசார் வஸ்த்ரா எனும் இந்த ஆடையை, பிரபலங்களும், அரசியல்வாதிகளும் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். விரைவில், பொதுமக்களுக்கும் இந்த ஆடைகள் கிடைக்கும். இந்த முயற்சி, காதி ஆடைகளின் விற்பனையை அதிகரிக்க உதவும் என, கருதுகிறோம்.கடந்த நிதியாண்டில், காதி பொருட்கள் விற்பனை, 29 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் அது, 35 சதவீதமாக அதிகரிக்க இலக்கு வைத்திருக்கிறோம். 2014 – 15ம் நிதியாண்டில், காதி பொருட்களின் விற்பனை, 1,170 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதியாண்டில், 1,510 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|