பதிவு செய்த நாள்
14 செப்2016
06:04
புதுடில்லி:‘உலகளவில், வரும் அக்., – டிச., வரையிலான மூன்று மாதங்களில், இந்திய நிறுவனங்கள், அதிகளவில் வேலைவாய்ப்பை வழங்கும்’ என, மேன்பவர் குழுமம் மதிப்பீடு செய்துள்ளது.இக்குழுமம், இந்தியாவைச் சேர்ந்த, 5,089 நிறுவனங்கள் மற்றும் 42 நாடுகளில், மதிப்பீட்டு காலாண்டில், வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்:இந்திய நிறுவனங்கள், மதிப்பீட்டு காலாண்டில், அதிகளவில் ஆட்களை பணிக்கு சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளன. ஆய்வில் பங்கேற்ற நாடுகளில், அதிக பணி வாய்ப்பு வழங்குவதில், இந்தியா, 31 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தை பிடித்து உள்ளது. எனினும், தகவல் தொழில்நுட்பத் துறையில், ‘சாப்ட்வேர் ரோபோ’ மூலம், பணிகள் தானியங்கி முறையில் நடைபெறுவது அதிகரிக்கும் என்பதால், வேலைவாய்ப்பு குறித்து கருத்து கூறுவதில், இந்திய நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் உள்ளன. அதேசமயம், ரோபோ நடைமுறையால், அதிக திறன் தேவைப்படும் பணிகளில், ஆட்கள் நியமனம் அதிகரிக்கும்; புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகலாம். சேவைகள் துறை தான், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கும் என, தெரிகிறது. இந்தியாவை அடுத்து, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகள் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என, நம்பிக்கையாக கருத்து தெரிவித்து உள்ளன. பிரேசில், பெல்ஜியம், பின்லாந்து, இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள், பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது, குறைவாக இருக்கும் என, கூறியுள்ளன. ‘மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனங்கள் வழங்கும் ஊதிய விகிதம் குறையும்’ என, பிரேசில் தெரிவித்துஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|