பதிவு செய்த நாள்
25 செப்2016
00:45
மும்பை:கோட்டக் மகிந்திரா வங்கி, வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கு துவக்குவதற்காக, மொபைல், ‘ஆப்’ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, அந்த வங்கியின், டிஜிட்டல் பிரிவு தலைமை அதிகாரி, தீபக் சர்மா கூறியதாவது:புதிய, ‘ஆப்’ மூலம், வாடிக்கையாளர்கள், வங்கி கிளைக்கு நேரில் வராமல், 10 நிமிடங்களில் கணக்கை துவக்கலாம். இந்த சேவையை பெற, வாடிக்கையாளர், எங்கள், ‘ஆப்’ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில், அவரின் மொபைல் போன் எண்ணை பதிவு செய்ததும், அந்த எண்ணிற்கு, ‘பாஸ்வேர்டு’ அனுப்பப்படும். அதை பதிவு செய்து, வாடிக்கையாளர், தன் புகைப்படம் அல்லது, ‘ஆதார்’ அட்டை விபரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், வாடிக்கையாளர்கள், ‘வீடியோ சாட்’ மூலம் உரையாடும் சேவையை துவக்குவதற்காக, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் ஒன்றுடன், வங்கி கூட்டு சேர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|