பதிவு செய்த நாள்
26 செப்2016
13:46
பெங்களூரு;“காவிரி பிரச்னையில் தமிழகம் - கர்நாடகா இடையிலான வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வர்த்தகம் பாதிக்கப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக வாகன போக்குவரத்துக்கு அரசு வாய்ப்பளிக்க வேண்டும்,” என, கர்நாடக லாரி உரிமையாளர்கள், முகவர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா வலியுறுத்தினார்.
பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:காவிரி பிரச்னை காரணமாக, கடந்த சில வாரங்களாக, தமிழகம் - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே, சரக்கு எடுத்து செல்லும் வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையேயான வியாபாரம், வர்த்தகம் பாதிக்கப்பட்டு, தினமும், 550 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
வாகன போக்குவரத்து இல்லாததால், விவசாயிகளின் விளைபொருட்கள், சந்தையிலேயே அழுகி பாழாகிறது. தமிழகத்தின் பல்வேறு நிறுவனங்களிலிருந்து வாகன உதிரி பாகங்கள், முட்டை மற்றும் காய்கறிகள் கர்நாடகாவுக்கு வருகின்றன.அதேபோன்று இங்கிருந்து தமிழகத்துக்கு வெங்காயம், சிறு சிறு உதிரி பாகங்கள் அனுப்பப்படுகின்றன. தற்போது தமிழக வாகனங்களை, கர்நாடக எல்லையிலும், கர்நாடக வாகனங்களை தமிழக எல்லையிலும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால், இரு மாநிலங்களுக்கும் பேரிழப்பு ஏற்படுகிறது.
அத்துடன் மருந்துகள், உணவுப் பொருட்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான கச்சாப் பொருட்கள் சரியான நேரத்துக்கு கிடைக்காமல் பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். அதிக விலை கொடுத்து, பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டு, இம்மாநிலங்களின் அரசுகளும், இவ்விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும், என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|