பதிவு செய்த நாள்
21 அக்2016
15:36
பெங்களூரு : குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா சேவை வழங்குவது தொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே கடும்போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் டீ வியாபாரி ஒருவர் வாடிக்கையாளர்களை கவருவதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
அவர் தனது கடையில் ரூ.5 மதிப்பிலான ஒரு கப் டீ குடித்தால், வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களுக்கு இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பிறகு இவரது கடையில் டீ குடிப்பதற்கு காலை முதல் மாலை வரை ஏராளமானோர் வரிசையில் நின்று வருகின்றனர். சையது காதர் பாஷா என்ற 23 வயது இளைஞரான அந்த வியாபாரி, உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர் மூலம் வைபை மற்றும் அன்லிமிடெட் டேட்டா சேவையை வாங்கி உள்ளார். இவரது கடையில் டீ வாங்குபவர்களுக்கு கூப்பனுடன் வை பை பாஸ்வேர்டும் வழங்கப்படுகிறது.
அவர்கள் 30 நிமிடம் இன்டர்நெட் பயன்படுத்திய பிறகு, இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டு விடும். ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் இந்த இலவச இன்டர்நெட் சேவையை பயன்படுத்தும்படியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை துவக்குவதற்கு முன் நாள் ஒன்றிற்கு 100 கப் டீ விற்று வந்ததாகவும், தற்போது ஒருநாளைக்கு 400 க்கும் மேலான கப் டீ விற்பனை செய்து வருவதாகவும் பாஷா தெரிவித்துள்ளார். இன்டர்நெட் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சியை பயன்படுத்தி, தொழிலை விரிவுபடுத்துவதற்காக இந்த யுத்தியை கையாண்டு வருவதாகவும் பாஷா தெரிவித்துள்ளார்.
இதற்காக மாதம் ரூ.1700 மட்டுமே செலவிடுவதாகவும், 1 முதல் 2 எம்பிபிஎஸ் இன்டெர்நெட் வேகத்தை பயன்படுத்தி ஒரே சமயத்தில் 10 முதல் 15 வாடிக்கையாளர்களை வை பை மூலம் இணைப்பாகவும் பாஷா கூறி உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|