அடுத்த ஆண்டிலிருந்து குறைந்த கட்டணத்தில் மண்டல விமான போக்குவரத்துஅடுத்த ஆண்டிலிருந்து குறைந்த கட்டணத்தில் மண்டல விமான போக்குவரத்து ... ஜியோ இலவச வாய்ஸ் அழைப்புக்களுக்கு தடையில்லை ஜியோ இலவச வாய்ஸ் அழைப்புக்களுக்கு தடையில்லை ...
ரூ.5 க்கு டீ குடித்தால் 30 நிமிடம் இலவச இன்டர்நெட் சேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2016
15:36

பெங்களூரு : குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா சேவை வழங்குவது தொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே கடும்போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் டீ வியாபாரி ஒருவர் வாடிக்கையாளர்களை கவருவதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
அவர் தனது கடையில் ரூ.5 மதிப்பிலான ஒரு கப் டீ குடித்தால், வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களுக்கு இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பிறகு இவரது கடையில் டீ குடிப்பதற்கு காலை முதல் மாலை வரை ஏராளமானோர் வரிசையில் நின்று வருகின்றனர். சையது காதர் பாஷா என்ற 23 வயது இளைஞரான அந்த வியாபாரி, உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர் மூலம் வைபை மற்றும் அன்லிமிடெட் டேட்டா சேவையை வாங்கி உள்ளார். இவரது கடையில் டீ வாங்குபவர்களுக்கு கூப்பனுடன் வை பை பாஸ்வேர்டும் வழங்கப்படுகிறது.
அவர்கள் 30 நிமிடம் இன்டர்நெட் பயன்படுத்திய பிறகு, இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டு விடும். ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் இந்த இலவச இன்டர்நெட் சேவையை பயன்படுத்தும்படியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை துவக்குவதற்கு முன் நாள் ஒன்றிற்கு 100 கப் டீ விற்று வந்ததாகவும், தற்போது ஒருநாளைக்கு 400 க்கும் மேலான கப் டீ விற்பனை செய்து வருவதாகவும் பாஷா தெரிவித்துள்ளார். இன்டர்நெட் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சியை பயன்படுத்தி, தொழிலை விரிவுபடுத்துவதற்காக இந்த யுத்தியை கையாண்டு வருவதாகவும் பாஷா தெரிவித்துள்ளார்.
இதற்காக மாதம் ரூ.1700 மட்டுமே செலவிடுவதாகவும், 1 முதல் 2 எம்பிபிஎஸ் இன்டெர்நெட் வேகத்தை பயன்படுத்தி ஒரே சமயத்தில் 10 முதல் 15 வாடிக்கையாளர்களை வை பை மூலம் இணைப்பாகவும் பாஷா கூறி உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)