பதிவு செய்த நாள்
06 டிச2016
03:31
லண்டன்பிரிட்டனில், போர்ட் டால்போட் நகரில், டாடா ஸ்டீல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நலிவுற்ற இந்த உருக்காலையின் புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பிரிட்டன் உருக்கு தொழிலாளர் சங்கங்களுக்கும், டாடா ஸ்டீல் நிர்வாகத்திற்கும் இடையே, பல மாதங்களாக பேச்சு நடைபெற்று வருகிறது. ஆனால், தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளில் சுமுக உடன்பாடு ஏற்படாததால், இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் கவுசிக் சட்டர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், பிரிட்டன் தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தினர். இதில், தொழிலாளர்களின் பெரும்பான்மையான கோரிக்கைகள் ஏற்கப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது. இந்த பேச்சு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதனால், பிரிட்டனின் மிகப்பெரிய உருக்கு தொழிற்சாலை மூடப்படாமல், குறைந்தபட்சம், 2020 வரை இயங்கும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|