பதிவு செய்த நாள்
08 டிச2016
15:59
மும்பை : ஆட்டோ துறை பங்குகள் தொடர்ந்து உயர்ந்து காணப்பட்டதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று (டிசம்பர் 8) முழுவதும் உயர்வுடன் காணப்பட்டன. நிப்டி காலை முதலே 8200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தே இருந்தன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 457.41 புள்ளிகள் உயர்ந்து 26,694.28 புள்ளிகளாகவும், நிப்டி 144.80 புள்ளிகள் உயர்ந்து 8246.85 புள்ளிகளாகவும் இருந்தன.
டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பெரும்பாலான நிறுவன பங்குகள் ஏற்றத்துடனேயே காணப்பட்டன. ஒரு சில நிறுவன பங்குகள் மட்டுமே சரிவுடன் காணப்பட்டன. ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்த வட்டிவிகித குறைப்பும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதும் பங்குச்சந்தைகளின் உயர்விற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|