பதிவு செய்த நாள்
09 டிச2016
04:34
புதுடில்லி:ஐ.ஓ.சி., – பாரத் பெட்ரோலியம் – இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைக்க உள்ளன. பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோலிய பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த மூன்று நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து, இந்தியாவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை, மஹாராஷ்டிராவில் அமைக்க உள்ளன. இந்த ஆலை, ஆண்டுக்கு, 6 கோடி டன் எண்ணெயை சுத்திகரிக்கும் திறனுடையதாக இருக்கும். இந்த கூட்டு நிறுவன ஆலையின் மொத்த பங்கில், ஐ.ஓ.சி., வசம், 50 சதவீத பங்குகளும்; இந்துஸ்தான், பாரத் நிறுவனங்களிடம், தலா, 25 சதவீத பங்குகளும் இருக்கும் என, தெரிகிறது.
இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன், 23.20 கோடி டன் என்றளவில் உள்ளது. கடந்த நிதிஆண்டில், கச்சா எண்ணெய் தேவை, 18.35 கோடி டன்னாக இருந்தது. இது, அடுத்த, 20 ஆண்டுகளில், 45 கோடி டன்னாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து, மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைக்க உள்ளன. இதற்கு, 1.70 – 2 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இதற்கான பணிகள், விரைவில் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|