பதிவு செய்த நாள்
09 டிச2016
04:34
புதுடில்லி:கிராம்ப்டன் கிரீவ்ஸ், மின் சாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 10.41 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர இழப்பாக கொண்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், கிராம்ப்டன், 10.58 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியது. இதே காலத்தில், அந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 1,446.99 கோடி ரூபாயில் இருந்து, 1,545.19 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், ஐரோப்பா, வட அமெரிக்கா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில், மின் சாதன பிரிவில், சிலவற்றை விற்பனை செய்ய, பாவெல்ஸ் ஸ்பாகோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. தற்போது, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், வேறு இடங்களிலோ அல்லது வேறு தயாரிப்புகள் மூலமாகவோ, விற்பனை பணிகள் தொடரும். ஒப்பந்தம் ரத்தானதால் ஏற்படும் இழப்புகள், இவ்வாறு சமன் செய்யப்பட்டுவிடும். எங்கள் மின் சாதன வணிகம் வெளிநாடுகளில் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|