பதிவு செய்த நாள்
03 மார்2017
15:51
வெளி மாநில வரத்து அதிகரிப்பு மற்றும் மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், தமிழகத்தில் பருப்பு விலை அதிரடியாக சரிந்துள்ளது. துவரம் பருப்பு, கிலோ, 75 ரூபாய்க்கு கிடைக்கிறது.
வெளிமாநில வரத்து குறைவு மற்றும் பெரிய நிறுவனங்களின் பதுக்கலால், தமிழகத்தில், கடந்த ஆண்டில், ஒரு கிலோ துவரம் பருப்பு, 225 ரூபாய் வரை சென்றது. மற்ற பருப்பு வகைகளின் விலைகளும், எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்ததால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.விலை உயர்வை கட்டுப்படுத்த, மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து பருப்பை இறக்குமதி செய்ததோடு, பதுக்கல் மீதும் நடவடிக்கையை துவக்கியது. இதனால், பருப்பு விலை குறைய துவங்கியது. அத்துடன், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், பதுக்கல் குறைந்ததோடு, ஆன்லைன் வர்த்தகமும் சரிந்ததால், பருப்பு விலை அதிரடியாக சரிந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து மளிகை உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர், எஸ்.பி.சொரூபன் கூறியதாவது: கடந்த மாதம், 9,000 ரூபாய்க்கு விற்ற, ஒரு மூடை துவரம் பருப்பு, 7,000 ரூபாய்; 6,000 ரூபாய் விற்ற ஒரு மூடை தான்சானியா பருப்பு, 5,000 ரூபாய்; 11 ஆயிரம் ரூபாய் விற்ற, ஒரு மூடை உளுத்தம் பருப்பு, 8,500 ரூபாயாக குறைந்துள்ளது.மேலும், 10 ஆயிரம் ரூபாய் விற்ற ஒரு மூடை பர்மா உளுந்து, 8,000 ரூபாய்; 8,000 ரூபாய்க்கு விற்ற, ஒரு மூடை பாசிப்பருப்பு, 6,500 ரூபாயாகவும் குறைந்துள்ளது. இவை அனைத்தும், 100 கிலோ எடை உடைய மூடை. 50 கிலோ எடையுள்ள, கடலை பருப்பு மூடை, 4,500 ரூபாயில் இருந்து, 3,100 ரூபாயாக குறைந்துள்ளது. பருவ மழை கை கொடுத்ததால், வட மாநிலங்களில் பருப்பு விளைச்சல் அதிகரித்ததும், பதுக்கல் குறைந்ததுமே விலை குறைய காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
சில்லரை விலை இது தான்வகை 2017 பிப்., மார்ச் துவரம் பருப்பு 95 752ம் தர துவரம் பருப்பு 80 65தான்சானியா பருப்பு 65 55உளுத்தம் பருப்பு 115 95பர்மா பருப்பு 115 95பாசி பருப்பு 90 70கடலை பருப்பு 95 70
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|