பதிவு செய்த நாள்
21 மார்2017
01:05
மும்பை : ‘‘இந்தியா, சர்வதேச வைர வர்த்தக மையமாகவும், உலகளாவிய வணிகர்களால், பெரிதும் விரும்பப்படும் தயாரிப்பு சந்தையாகவும் உருவாக வேண்டும்,’’ என, பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
மும்பையில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின், பொன் விழா நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, காணொளி காட்சி மூலம் உரையாற்றினார்.
அதன் விபரம்: வைரங்களை நறுக்குவது, பட்டை தீட்டுவது ஆகியவற்றில், இந்தியா, சர்வதேச மையமாக திகழ்கிறது. அது போல, வைர வர்த்தகத்திலும், இந்தியா புகழ் பெற வேண்டும் என்பதே, நம் விருப்பம். சர்வதேச நிறுவனங்களின் விருப்பமான வைர நகை தயாரிப்பு மையமாக, இந்தியா உருவாக வேண்டும்.
முதலிடம்உலகளவில், வைர நகைகளை தயாரிப்பதிலும், நறுக்கப்பட்ட, பட்டை தீட்டப்பட்ட வைரங்களை ஏற்றுமதி செய்வதிலும் முதலிடத்தை பிடிப்பதற்கு, இந்தியா, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.அதன் விளைவாக, 1966 – 67ல், 2.80 கோடி டாலராக இருந்த, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 50 ஆண்டுகளில், மிகச் சிறப்பான வளர்ச்சி கண்டு, 4,750 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியா, தங்கம், வைரம் ஆகியவற்றை உற்பத்தி செய்யாத நிலையிலும், இத்தகைய வளர்ச்சியை பெற்றுள்ளது. நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை, 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது; அதில், 10 லட்சம் பேர், வைர தொழிலில் உள்ளனர். இத்துறை, மிகச் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், அதற்குரிய ஆற்றலை முழுமையாக பயன்படுத்தாமல், இன்னும் பின்தங்கியே உள்ளது.
வைரங்களை நறுக்குவதிலும், பட்டை தீட்டுவதிலும், நாம் மிகவும் வலிமையுடன் உள்ளோம். ஆனால், சர்வதேச சந்தையில், நம் பங்களிப்பு மிகக்குறைவாக உள்ளது. நமக்குள்ள ஆற்றலுக்கு ஏற்ப, நம் பங்களிப்பு இல்லை. சந்தையை நன்கு புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்களை வகுப்பதன் மூலம், நாம் இத்துறையில், சர்வதேச மையமாக உருவெடுக்கலாம்.மாற வேண்டும்
இந்தியாவின் வைரங்கள் ஏற்றுமதி, அதன் இறக்குமதியை சார்ந்தே உள்ளது. வெளிநாட்டினர் வழங்கும் அளவு மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், நாம் வைர நகைகளை உருவாக்கி, ஏற்றுமதி செய்கிறோம். அதாவது, வெளிநாட்டினரின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் செயல்படுகிறோம்; இந்நிலை மாற வேண்டும். நாம் வழங்குவதை, வெளிநாட்டினர் ஏற்கும் நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு சந்தை குறித்த ஆழமான அறிவு தேவை. அதனடிப்படையில், தெளிவான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.
தற்போது, மின்னணு வர்த்தகம், தயாரிப்பு நிறுவனங்கள் நேரடியாக பயனாளிகளை அணுக துணை புரிகிறது. நாம் நவீன வடிவமைப்பில், வெளிநாட்டினரை வசீகரிக்கும் வகையில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களை உருவாக்க வேண்டும். அதற்கான ஆற்றல் நமக்கு உள்ளது. அதன் மூலம், நாம் இத்துறையில் முதலிடத்தை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|