பதிவு செய்த நாள்
22 மார்2017
05:20
மும்பை : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடன், அதன் ஐந்து துணை வங்கிகள், ஏப்., 1ல் இணைக்கப்படுகின்றன.அன்று முதல், அந்த ஐந்து துணை வங்கி கிளைகள், எஸ்.பி.ஐ., வங்கி கிளைகளாக செயல்பட துவங்கும். ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து துணை வங்கியின் வாடிக்கையாளர்கள், எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்களாக மாறுவர். பாரதிய மகிளா வங்கியும், எஸ்.பி.ஐ., உடன் இணைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இணைப்பு நடவடிக்கைக்கு பின், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 37 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், 22,500 கிளைகள் மற்றும் 58 ஆயிரம் ஏ.டி.எம்.,களுடன், 50 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட, வங்கியாக உருவெடுக்கும்.எஸ்.பி.ஐ.,க்கு மட்டும், 36 நாடுகளில், 191 அயல்நாட்டு அலுவலகங்கள் உட்பட, 20 ஆயிரம் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|