பதிவு செய்த நாள்
22 மார்2017
05:21
புதுடில்லி : இந்தியாவில், உணவுப் பொருட்களை விற்பனை செய்வ தற்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அமைப்பு உரிமம் வழங்குகிறது. தற்போது, இந்த அமைப்பு, உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறை களையும் வெளியிட்டு உள்ளது.
அதன் விபரம்: அனைத்து இறக்குமதியாளர்களும், இந்தியாவில் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய, ‘லைசென்ஸ்’ பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.மேலும், உணவுப் பொருட்களின், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிக்குள், குறைந்தபட்சம், 60 சதவீத பயன்பாட்டுக் காலம் உள்ள, உணவுப் பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம், மாதிரி ஆய்வு, கிடங்குகள் தொடர்பான விதிமுறைகளை, நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அமைப்பின், தலைமை செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால் கூறுகையில், ‘‘புதிய கட்டுப்பாடுகள் மூலம், இறக்குமதியில் உள்ள, குழப்பங்கள் தவிர்க்கப்படும். மேலும், உணவுப் பொருட்கள் பிரிவில், நிலையான மற்றும் வெளிப்படையான வணிகம் மேற்கொள்ள முடியும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|