பதிவு செய்த நாள்
24 மார்2017
10:23
மும்பை : தொடர்ந்து 3 நாட்கள் சரிவிற்கு பிறகு, இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவிலிருந்து மீண்டன. இந்த ஏற்றத்தை வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்றும் (மார்ச் 24) பங்குச்சந்தைகள் தக்க வைத்துக் கொண்டுள்ளன. நிப்டி மீண்டும் 9100 புள்ளிகளை கடந்துள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
இன்றைய வர்த்தக துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 113.51 புள்ளிகள் உயர்ந்து 29,350.60 புள்ளிகளாகவும், நிப்டி 32.80 புள்ளிகள் உயர்ந்து 9119.10 புள்ளிகளாகவும் உள்ளன. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவிலிருந்து மீண்டுள்ளதும், முதலீட்டாளர்கள் வங்கிகள் மற்றும் எப்எம்ஜிசி பங்குகளை தொடர்ந்து வாங்கியதாலும் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் தொடர்கிறது.
வங்கிகள், கட்டுமானதுறை, உலோகங்கள், மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. ஹாங்காங், ஷங்காய், ஜப்பான் பங்குச்சந்தைகளும் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. அதேசமயம் அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|