பதிவு செய்த நாள்
29 மார்2017
01:14
மும்பை : தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ வெளியிட்டுள்ள அறிக்கை: ரிசர்வ் வங்கி, கடந்த பிப்ரவரியில் வெளியிட்ட நிதி கொள்கையில், வங்கிகளின் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. வட்டி விகிதம், தற்போது மிகவும் குறைவாக உள்ளது. இந்தாண்டு, இதே நிலை நீடிக்கும் என, தெரிகிறது. கடந்த ஜனவரியில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 3.17 சதவீதமாக இருந்தது; இது, பிப்ரவரியில், 3.65 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நடப்பு மார்ச்சில், சில்லரை விலை பணவீக்கம், 4.5 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.எனினும், இது, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த, 5 சதவீத இலக்கை விட குறைவு. அதே சமயம், நடுத்தர கால அளவில், சில்லரை பணவீக்கத்தை, 4 சதவீதத்திற்குள் கட்டுக்குள் வைக்க, ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.அதனால், ரிசர்வ் வங்கி, ஏப்., 6ல் வெளியிட உள்ள, நிதி கொள்கையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|