இந்திய காபிக்கு ‘பிராண்டு’ மதிப்பு தேவை மத்திய வர்த்தக அமைச்சகம் வலியுறுத்தல்இந்திய காபிக்கு ‘பிராண்டு’ மதிப்பு தேவை மத்திய வர்த்தக அமைச்சகம் ... ... இணைய தயார் நிலை; டில்லி முதலிடம் இணைய தயார் நிலை; டில்லி முதலிடம் ...
கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை 2 லட்சம் நிறுவனங்களின் உரிமம் ரத்தாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2017
06:40

புதுடில்லி : மத்­திய அரசு, கறுப்­புப் பணப்­பு­ழக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில், நீண்ட காலம் செயல்­ப­டா­மல் உள்ள, இரண்டு லட்­சத்­திற்­கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­களின் உரி­மத்தை ரத்து செய்ய முடிவு செய்­துள்­ளது.இது தொடர்­பாக, அந்­நி­று­வ­னங்­க­ளி­டம் விளக்­கம் கேட்டு, ‘நோட்­டீஸ்’ அனுப்­பப்­பட்டு உள்­ளது.பலர், வெளி­நா­டு­களில் கறுப்­புப் பணத்தை பதுக்­க­வும், அதை, மீண்டும் இந்­தி­யா­வுக்கு கொண்டு வந்து, வெள்­ளை­யாக மாற்­ற­வும், போலி நிறு­வ­னங்­களை துவக்­கு­கின்­ற­னர். இத்­த­கைய சட்ட விரோத பணப் பரி­மாற்­றம் தொடர்­பாக, சமீ­பத்­தில், 100க்கும் மேற்­பட்ட போலி நிறு­வ­னங்­களில், வரு­மான வரித்­து­றை­யி­னர் அதி­ரடி சோதனை நடத்­தி­னர்.இது போன்ற போலி நிறு­வ­னங்­களை அறவே ஒழிக்­கும் நோக்­கில், நீண்ட காலம் செயல்­ப­டா­மல் உள்ள நிறு­வ­னங்­களின் உரி­மத்தை ரத்து செய்ய, மத்­திய நிறு­வ­னங்­கள் விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கம் முடிவு செய்­துள்­ளது. இதை­ய­டுத்து, அனைத்து மாநி­லங்­க­ளி­லும், நீண்ட காலம் செயல்­ப­டா­மல் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு, விளக்­கம் கேட்டு நோட்­டீஸ் அனுப்­பு­மாறு, நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் அலு­வ­ல­கங்­களை, அமைச்­ச­கம் அறி­வு­றுத்தி உள்­ளது.அதன்­படி, இரண்டு லட்­சத்­திற்­கும் அதி­க­மான நிறு­வ­னங்­க­ளுக்கு, நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் அலு­வ­ல­கங்­கள், நோட்­டீஸ் அனுப்­பி­யுள்ளன. அதில், மும்­பை­யில், 71 ஆயி­ரம் நிறு­வ­னங்­களும், டில்­லி­யில், 53 ஆயி­ரம் நிறு­வ­னங்­களும் அடங்­கும்.இது குறித்து, அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:நிறு­வ­னங்­கள் சட்­டப்­படி பதிவு செய்த நிறு­வ­னங்­கள், ஓராண்­டுக்­குள் தொழிலை துவக்க வேண்­டும்.இந்­நி­று­வ­னங்­கள், ஆண்­டு­தோறும் நிதி­நிலை அறிக்­கையை, தாக்­கல் செய்ய வேண்­டும். தொடர்ந்து இரு நிதி­யாண்டு கணக்­கு­களை தாக்­கல் செய்­யாத நிறு­வ­னங்­கள் அல்­லது தற்­கா­லி­க­மாக செயல்­ப­டா­மல் இருப்­ப­தற்கு, அனு­மதி வாங்­காத நிறு­வ­னங்­க­ளுக்கு, நோட்­டீஸ் அனுப்­பப்­பட்டு உள்­ளது.இந்த நோட்­டீஸ் கண்ட, 30 நாட்­க­ளுக்­குள், அந்­நி­று­வ­னங்­கள், செயல்­ப­டா­மல் உள்­ள­தற்­கான கார­ணங்­களை விளக்க வேண்­டும். அந்த விளக்­கங்­கள் திருப்தி அளிக்­க­வில்லை என்­றால், அந்­நி­று­வ­னங்­களை, பதிவு பெற்ற நிறு­வ­னங்­களின் பட்­டி­ய­லில் இருந்து நீக்க, அமைச்­ச­கத்­திற்கு அதி­கா­ரம் உள்­ளது. இதற்­காக, நிறு­வ­னங்­கள் சட்­டத்­தில், சமீ­பத்­தில் திருத்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டது.இந்த வகை­யில், தற்­போது, இரண்டு லட்­சத்­திற்­கும் அதி­க­மான நிறு­வ­னங்­க­ளுக்கு, நோட்­டீஸ் அனுப்­பப்­பட்டு உள்­ளது. அவை, குறிப்­பிட்ட, ‘கெடு’வுக்­குள் பதி­ல­ளிக்­கத் தவ­றி­னாலோ அல்­லது விளக்­கம் திருப்தி அளிக்­க­வில்லை என்­றாலோ, அந்­நி­று­வ­னங்­களின் உரி­மம் ரத்து செய்­யப்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

இந்­தி­யா­வில், நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தில், நிறு­வ­னங்­கள் சட்­டத்­தின்­படி, 15 லட்­சத்­திற்­கும் அதி­க­மான நிறு­வ­னங்­கள் பதிவு செய்­யப்­பட்டு உள்ளன. பலர், போலி நிறு­வ­னங்­களை துவக்கி, அவற்­றின் வாயி­லாக வெளி­நா­டு­க­ளி­லும், உள்­நாட்­டி­லும் கறுப்­புப் பணத்தை பதுக்கி வைக்­கின்­ற­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)