பதிவு செய்த நாள்
24 ஏப்2017
04:15
மின்னணு உள்கட்டமைப்பு, மின்னணு பங்கேற்பு, ஐ.டி., சூழல், மின்னணு நிர்வாகம் உள்ளிட்ட இணைய தயார் நிலையில் டில்லி முதலிடம் வகிக்கிறது.
இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம், இந்திய மாநிலங்களில் இணைய தயார் நிலை அட்டவணையை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில், டில்லி முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா, மஹாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழகம் அடுத்த இடங்களில் வருகிறது.மின்னணு உள்கட்டமைப்பில் சண்டிகர் இரண்டாவது இடமும், புதுச்சேரி மூன்றாவது இடமும் வகிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் நாகாலாந்து முதலிடம் வகிக்கிறது. மணிப்பூர் மற்றும் திரிபுரா இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.
கர்நாடகா, டில்லி மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக டிஜிட்டல் ஸ்டார்ட் – அப் நிறுவனங்கள் உள்ளன. ஸ்டார்ட் – அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் அடைகாக்கும் மையங்கள் மொத்தம், 242 இந்திய அளவில் உள்ளன. இவற்றில் தமிழகத்தில் 61 மையங்கள் அமைந்துள்ளன.
தமிழகம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட, 10 மாநிலங்களில் 83 சதவீத மையங்கள் அமைந்துள்ளன.வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரில் மட்டும் ஒரு மையம் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|