பதிவு செய்த நாள்
24 ஏப்2017
04:25
புதுடில்லி : ஏ.சி.சி., நிறுவனம், சிமென்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில், 211.06 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 231.70 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய், 3,323.17 கோடி ரூபாயில் இருந்து, 3,663.18 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தி, 3.77 சதவீதம் அதிகரித்து, 63.60 லட்சம் டன்னில் இருந்து, 66 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நீரஜ் ஆகோரி கூறுகையில், ‘‘எங்கள் நிறுவனம், கடந்த நிதியாண்டில், இரு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது. ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும்,’’ என்றார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|