பதிவு செய்த நாள்
28 ஏப்2017
01:18
சென்னை : பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி., நிறுவனம், ஆதார் ஸ்தம்ப் மற்றும் ஆதார் ஷீலா என்ற இரண்டு புதிய பாலிசி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஆதார் ஸ்தம்ப், ஆண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சிறப்பு திட்டமாகும். ஆதார் ஷீலா, மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு பாலிசி ஆகும். ஆதார் ஸ்தம்ப், ஆதார் ஷீலா ஆகிய இரண்டு பாலிசிகளுமே சேமிப்பு மற்றும் பாதுகாப்பு இரண்டையும் சேர்த்து வழங்குகின்றன. இந்த பாலிசிகளின் முதிர்வு காலத்தில் ரொக்கமாக பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். எதிர்பாராத வகையில் பாலிசிதாரர் மரணமடைய நேர்ந்தால், அவர்களது குடும்பத்துக்கு பொருளாதார உதவி கிடைக்கும். ஒருவரிடம் இருக்கும் அனைத்து பாலிசிகளின் அடிப்படை காப்பீட்டு தொகை, மூன்று லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் மட்டுமே, அவருக்கு இந்த பாலிசி வழங்கப்படும். எட்டு வயது முதல், 55 வயது வரையுள்ள, நல்ல உடல் தகுதியுடன் இருப்பவர்கள், மருத்துவ பரிசோதனை எதுவும் இல்லாமல், இந்த பாலிசியை பெற்றுக்கொள்ளலாம். அதிகபட்ச முதிர்வு வயது, 70 ஆண்டுகள். பிரீமியம் செலுத்தும் காலம், 10 முதல், 20 ஆண்டுகள் ஆகும். மேலும், ஆட்டோ கவர் என்ற சிறப்பு சலுகையும் உள்ளது. இதன் மூலம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிரீமியம் செலுத்தாத காலத்திலும் பாதுகாப்பு தொடரும். இதில் விபத்து காப்பீட்டு பயன் மற்றும் கடன் வசதியும் உள்ளது சிறப்பாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|