தரம் குறைந்த பொருட்கள் இறக்குமதியை தடுக்க என்ன வழி?தரம் குறைந்த பொருட்கள் இறக்குமதியை தடுக்க என்ன வழி? ... பிரிட்­டனை மிஞ்சும் இந்­திய பொரு­ளா­தாரம் பிரிட்­டனை மிஞ்சும் இந்­திய பொரு­ளா­தாரம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடு மோசம்:பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2017
03:49

புதுடில்லி:‘‘கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் நிர்­வாக செயல்­பா­டு­கள் மோச­மாக, மிக­வும் கவலை அளிப்­ப­தாக உள்ளன,’’ என, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யின் தலை­வர் அஜய் தியாகி குற்­றஞ்­சாட்டி உள்­ளார்.
சமீ­பத்­தில், இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தில், தனி இயக்­கு­னர் நிய­ம­னம், உய­ர­தி­கா­ரி­களின் ஊதிய உயர்வு உள்­ளிட்­டவை தொடர்­பாக, நிறு­வ­னர் ­க­ளுக்­கும், இயக்­கு­னர் குழு­வுக்­கும் பகி­ரங்க மோதல் வெடித்­தது.அதே போல, கடந்த ஆண்டு, டாடா குழு­மத்­தி­லும் அதி­ரடி நட­வ­டிக்­கை­கள் அரங்­கே­றின. டாடா சன்ஸ் தலை­வர் பத­வி­யில் இருந்து, சைரஸ் மிஸ்­திரிநீக்­கப்­பட்டு, ரத்­தன் டாடா மீண்­டும் தற்­கா­லிக தலை­வ­ராக பொறுப்­பேற்­றார்.
இதை தொடர்ந்து, இரு­த­ரப்­பி­லும் கார­சா­ர­மான அறிக்கை போர் நடை­பெற்­றது. சைரஸ் மிஸ்­தி­ரி­யும், ரத்­தன் டாடா­வும், ஒரு­வர் மீது ஒரு­வர் குற்­றஞ்­சாட்டி, ‘செபி’யிடம் புகார் அளித்­த­னர்.பெரிய நிறு­வ­னங்­களில் நடை­பெ­றும் இது போன்ற நிர்­வாக ரீதி­யி­லான மோதல்­க­ளால், அவற்­றின் மதிப்பு சரி­வ­து­டன், பங்­குச் சந்­தை­யில், அந்­நி­று­வ­னங்­களின் பங்­கு­கள் விலை­யி­லும் அதிக தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்றன.
இத­னால், பங்கு முத­லீட்­டா­ளர்­கள் பாதிக்­கப்­ப­டு­வதை தவிர்க்க, ‘அனைத்து கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களும், நிர்­வாக நடை­மு­றை­களை கட்­டா­யம் பின்­பற்ற வேண்­டும்’ என, ‘செபி’ வலி­யு­றுத்தி வரு­கிறது.
இது குறித்து, ‘செபி’ தலை­வர் அஜய் தியாகி, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் மேலும் கூறி­ய­தா­வது:கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் இயக்­கு­னர் குழு குறித்து, ‘செபி’ தெளி­வான வழி­காட்­டு­தலை வழங்­கி­யுள்­ளது. ஆனால், அவற்றை, பல நிறு­வ­னங்­கள் பின்­பற்­று­வ­தில்லை; நிறு­வ­னங்­களின் தணிக்கை குழு செயல்­ப­டு­வ­தில்லை.
தனி இயக்­கு­னர்­கள், அவர்­க­ளுக்கு உரிய பொறுப்­பு­டன் நடந்து கொள்­வ­தில்லை; தலை­மைக்கு அடுத்த வாரிசு குறித்த தெளி­வான கொள்­கை­யில்லை. இது போல், பல பிரச்­னை­கள் உள்ளன. அவை, ‘செபி’யின் கவ­னத்­திற்கு வந்­துள்ளன. விரை­வில், இது தொடர்­பாக ஆலோ­சனை மேற்­கொண்டு, உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
வழிகாட்டு நெறிமுறை
கடந்த ஜன­வ­ரி­யில், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் இயக்­கு­னர் குழு, எத்­த­கைய மதிப்­பீட்­டின்­படி அமைக்­கப்­பட வேண்­டும் என்­ப­தற்­கான வழி­காட்டு நெறி­மு­றை­களை, ‘செபி’ அனைத்து நிறு­வ­னங்­க­ளுக்­கும் அனுப்­பி­யது.அதில், இயக்­கு­னர் குழுவை மதிப்­பி­டு­வ­தில், தலை­வ­ருக்கு உள்ள பொறுப்­பு­கள் குறித்து, தெளி­வாக, முன்­கூட்­டியே வரை­ய­றுக்க வேண்­டும். தனி இயக்­கு­னர்­கள் உட்­பட, பல்­வேறு உறுப்­பி­னர்­கள் மற்­றும் குழுக்­க­ளுக்கு, இயக்­கு­னர் குழுவை மதிப்­பி­டு­வ­தில் உள்ள பொறுப்­பு­களை நிர்­ண­யிக்க வேண்­டும் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
விதி­மு­றைப்­படி, நிர்­வாக செயல்­பா­டு­களை நிறு­வ­னங்­கள் வெளி­யிட வேண்­டும்; தனி இயக்­கு­னர்­கள் மற்­றும் இதர உறுப்­பி­னர்­களின் செயல்­பா­டு­களை மதிப்­பீடு செய்­வ­தற்­கான அள­வு­கோல்­களை, நிறு­வ­னங்­களின் பணி நிய­ம­னம் மற்­றும் ஊதி­யக் குழுக்­கள் உரு­வாக்க வேண்­டும் என­வும், ‘செபி’ வலி­யு­றுத்தி உள்­ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)