பதிவு செய்த நாள்
01 மே2017
04:14
இந்தியர்கள் பொதுவாக வைப்பு நிதி போன்ற முதலீட்டு வாய்ப்புகளை அதிகம் நாடி வந்தாலும், அண்மை காலமாக மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் ஆர்வமுடன் முதலீடு செய்கின்றனர். மியூச்சுவல் பண்ட் முதலீடு சிறந்ததாக கருதப்பட்டாலும், அதன் பல்வேறு அம்சங்களை அறிந்து கொண்டு முதலீடு செய்வது ஏற்றதாக கருதப்படுகிறது. பொதுவாக நோக்கும் போது மியூச்சுவல் பண்ட் முதலீட்டின் சாதகம் மற்றும் பாதகமான அம்சங்கள் இவை:
பங்குச்சந்தை பங்கேற்புமுதலீட்டாளர்களை பொருத்தவரை பங்கு முதலீட்டில் பங்கேற்பதற்கான வாய்ப்பாக மியூச்சுவல் பண்ட் முதலீடு அமைகிறது. முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குகளை வாங்க வேண்டியதில்லை. குறிப்பிட்ட பங்குகளின் ஏற்ற இறக்கம் பற்றி கவலைப்பட வேண்டாம். தொழில்முறை வல்லுனர்கள் அவர்கள் சார்பாக பங்குகளை வாங்கி நிர்வகிப்பார்கள். முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் முதலீடு பண்ட், நோக்கத்திற்கு ஏற்ப பங்குகள் உள்ளிட்ட முதலீட்டு சாதனங்களில் முதலீடு செய்யப்பட்டு, அதன் பலன் முதலீடு பங்கிற்கு ஏற்ப பிரித்தளிக்கப்படும்.
விரிவாக்கம்மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் பங்குகள் மட்டும் அல்லாமல், பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளில் முதலீடு செய்கின்றன. முதலீட்டு வாய்ப்புகளின் தேர்வுக்கு ஏற்ப பலவகையான பண்ட்கள் இருக்கின்றன. உதாரணமாக, சம பங்குகளில் அதிகம் முதலீடும் செய்யும் பண்ட்கள் ஈக்விட்டி பண்ட் என குறிப்பிடப்படுகின்றன. டெப்ட் பண்ட்கள் பத்திரங்கள் போன்ற கடன் சார் முதலீடுகளில் கவனம் செலுத்துகின்றன. முதலீடு விரிவாக்கத்திற்கும் இவை உதவுகின்றன.
எளிய வாய்ப்புமியூச்சுவல் பண்ட் திட்டங்களில் மொத்தமாகவும் முதலீடு செய்யலாம். அல்லது தவணை முறையிலும் முதலீடு செய்யலாம். இந்த வகையான வாய்ப்பை, எஸ்.ஐ.பி., எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் வழங்குகிறது. இவற்றில் குறைந்தபட்சம், 500 ரூபாயில் இருந்து துவங்கலாம். மாதந்தோறும் காலாண்டு என தேர்வு செய்து கொள்ளலாம். புதியவர்களுக்கு இந்த முறை மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. முதலீடு தொடர்பான ஒழுக்கத்தை அளிப்பதாகவும் கருதப்படுகிறது.
செலவு கட்டணம்மியூச்சுவல் முதலீடுகளை விரும்பிய நேரத்தில் உடனடியாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் சில பாதகமான அம்சங்களும் உண்டு. அடிப்படையில் இரண்டு வகையான பண்ட்கள் உள்ளன. ஓபன் எண்ட் பண்டில் எப்போது வேண்டுமானாலும் நுழைந்து விரும்பிய போது வெளியேறலாம். ஆனால், குளோஸ்ட் எண்ட் பண்ட்களில் 3 முதல் 5 ஆண்டு லாக் இன் காலம் உண்டு. மேலும், மியூச்சுவல் பண்ட் முதலீடு நிர்வாகத்திற்கு ஆண்டு கட்டணம் உண்டு. இவை செலவு விகிதம் என குறிப்பிடப்படுகிறது.
ஆலோசனை அவசியம்மியூச்சுவல் பண்ட் முதலீட்டின் பலன் என்.ஏ.வி., எனப்படும் நெட் அசெட் வேல்யூவாக குறிப்பிடப்படுகிறது. பண்ட்களை யூனிட்களாக வாங்கலாம். இது போன்ற அடிப்படையான அம்சங்களை அறிந்து கொள்வது அவசியம். அதே போல மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் தொடர்பான நோக்கம் மற்றும் ரிஸ்க் அம்சங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலீடு செய்யும் முன் முறையான ஆலோசனையை நாடுவது நல்லது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|