பதிவு செய்த நாள்
25 ஜூன்2017
06:01
மும்பை : மாடர்ன் புட்ஸ் நிறுவனம், டில்லியில், ரொட்டி விற்பனையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளது.பல மாநிலங்களில், ரொட்டி விற்பனையில், முன்னணியில் உள்ள மாடர்ன் புட்ஸ் நிறுவனத்தின் விற்றுமுதல், கடந்த நிதியாண்டில், 270 கோடி ரூபாயாக இருந்தது. இதை, நடப்பாண்டில், 25 சதவீதம் அதிகரிக்க, இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக, புதிய சந்தைகளில் களமிறங்க உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் செயல் அதிகாரி அசீம் சோனி கூறியதாவது:வரும், 2021ல், 1,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், மூன்றில் ஒரு பங்கு, ரொட்டி அல்லாத இதர பொருட்களின் மூலம் ஈட்டப்படும். மேலும், வட மாநிலங்களில், ரொட்டி விற்பனையை அதிகரிக்க உள்ளோம். இதற்காக, அடுத்த ஆண்டு, டில்லி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில், ரொட்டி விற்பனை துவங்கப்படும்.நாட்டில், டில்லி மிகப்பெரிய சந்தையாக உள்ளது. அங்கு, சில ஆண்டுகளுக்கு முன், சிறிய அளவில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டன. மீண்டும், அங்கு சந்தைப்படுத்த இருக்கிறோம். மேலும், ‘கேக், ரஸ்க்’ விற்பனையிலும் ஈடுபட உள்ளோம். தற்போது, பிஸ்கட் சந்தையில் களமிறங்கும் எண்ணமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|