பதிவு செய்த நாள்
25 ஜூன்2017
06:04
புதுடில்லி : சீனாவின், பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி மீதான தடையை, மத்திய அரசு, 2018 ஜூன் வரை நீட்டித்துள்ளது.சர்வதேச அளவில், பால் உற்பத்தி மற்றும் நுகர்வில், இந்தியா முன்னணியில் உள்ளது. ஆண்டுதோறும், சராசரியாக, 150 கோடி டன் பால் உற்பத்தியாகிறது. நாட்டின் பால் உற்பத்தியில், உ.பி., முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால், அவற்றின் இறக்குமதி மீதான தடையை, மத்திய அரசு நீட்டித்துள்ளது.இது குறித்து, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில், சீன நிறுவனங்களின் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கான தடை, முதன்முதலாக, 2008 செப்டம்பரில் விதிக்கப்பட்டது. அது, அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது தடையை நீட்டிக்குமாறு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வலியுறுத்தியது. அதன்படி, மேலும், ஓராண்டுக்கு அதாவது, 2018 ஜூன் வரை, சீன பால் பொருட்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|