கமாடிட்டி சந்தைகமாடிட்டி சந்தை ... எஸ்.ஐ.பி., முத­லீ­டு­கள் வெற்­றி­க­ர­மா­னதா? எஸ்.ஐ.பி., முத­லீ­டு­கள் வெற்­றி­க­ர­மா­னதா? ...
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2017
01:03

தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, நிப்டி, கடந்த வாரம் ஆரம்­பத்­தில், உயர்­வில் துவங்கி, செவ்­வா­யன்று புதிய வர­லாற்று உச்­ச­மான, 10,178 புள்­ளி­களை அடைந்­தது. இருப்­பி­னும், இந்த உயர்வு நிலைத்து நிற்­க­வில்லை. அடுத்த நான்கு நாட்­க­ளி­லும் சரி­வைச் சந்­தித்து, 226 புள்­ளி­கள் குறைந்து, 9952 என்ற குறைந்த அளவை எட்­டி­யது.கடந்த வாரம் போலவே, ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்­தி­லும், சந்தை இது போன்ற ஒரு சரி­வைச் சந்­தித்­தது. அப்­போது, 9,685 புள்­ளி­கள் வரை சரிந்­தது. அதன் பின் ஏற்­பட்ட உயர்­வு­தான், வர­லாற்று உச்­சத்­தில் கொண்டு போய் நிறுத்­தி­யது.இந்த வாரத்­தைப் பொறுத்­த­வரை, பெரிய பொரு­ளா­தார கார­ணி­கள் எது­வும் வெளி­வ­ரப் போவ­தில்லை. வரும் வியா­ழன் அன்று, எப்.அண்­டு ஓ, செட்­டில்­மென்ட் மற்­றும், வெள்­ளி­யன்று நிப்டி இண்­டெக்ஸ் மாற்றி அமைக்­கப்­பட இருப்­பது ஆகி­ய­வை ­தான் முக்­கி­ய­மா­னவை.ஏ.சி.சி., பேங்க் ஆப் பரோடா, டாடா பவர், டாடா மோட்­டார்ஸ் டி.வி­.ஆர்., போன்­ற­வற்றை நீக்கி, புதி­தாக, பஜாஜ் பைனான்ஸ், எச்.பி.சி.எல்., யு.பி.எல்., ஆகி­யவை சேர்க்­கப்­பட உள்ளன. இந்த நிகழ்­வு­க­ளைப் பார்க்­கும் போது, அடுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு நீக்­கப்­படும் பங்­கு­கள் விலை குறைந்­தும், புதி­தாக சேர்க்­கப்­படும் பங்­கு­கள், விலை உயர்ந்­தும் காணப்­படும்.மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மற்­றும் தொழிற்­துறை வளர்ச்சி ஆகி­யவை குறைந்­துள்ள சூழ­லில், அரசு ஊக்­கு­விப்­புத் தொகை வழங்க வாய்ப்­பி­ருக்­கிறது. ரிசர்வ் வங்கி மத்­திய அர­சுக்கு கொடுத்த ஈவுத்­தொகை குறை­வா­கும். மேலும், இந்த நிதி­யாண்­டின், முதல் நான்கு மாத நிதிப் பற்­றாக்­கு­றை­யா­னது, மத்­திய அர­சின் மொத்த பட்­ஜெட் தொகை­யின், 90 சதவீதம் ஆகும். மேலும் ஜி.எஸ்.டி., வரி­வி­திப்பு, உயர் பண மதிப்பு நீக்­கம் போன்­றவை பொரு­ளா­தார சரிவை ஏற்­ப­டுத்தி உள்­ளது என்ற கருத்­தும் நில­வு­கிறது.தற்­போது பங்­குச் சந்தை வளர்­சி­யா­னது, அதிக பரி­வர்த்­தனை கார­ண­மா­கத்­தான் உயர்ந்து வரு­கி­றதே தவிர, பொரு­ளா­தார வளர்ச்சி கார­ண­மாக இல்லை என்ற கருத்­தும் இருக்­கிறது. உள்­நாட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­கள் மற்­றும் பரஸ்­பர நிதி முத­லீட்டு நிறு­வ­னங்­கள் போன்­ற­வை­ தான் மிக அதிக அள­வில் சந்­தை­யில் முத­லீடு செய்து வரு­கின்றன.மேலும், எஸ்.ஐ.பி., எனப்­படும் மாதம் தோறும் முத­லீடு செய்­யும் திட்­டம் மூல­மாக, ஒவ்­வொரு மாத­மும், 6,௦௦௦ கோடி ரூபாய் வரை முத­லீடு செய்­யப்­ப­டு­கிறது. முத­லீட்­டா­ளர்­கள் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது.வரும் நாட்­களில் சந்­தை­யின் போக்கு, சர்­வ­தேச சந்­தை­யின் போக்­கி­லும் அமை­யும். அமெ­ரிக்க பங்­குச் சந்­தை­களும் வர­லாற்று உச்­சத்­தில் வர்த்­த­க­மா­கின்றன.இந்த வாரம், தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்­டின், முதல் ரெசிஸ்­டென்ஸ் 10,035. அடுத்து, 10,180. சப்­போர்ட் 9,681 மற்­றும் 9,783 ஆகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)