பதிவு செய்த நாள்
22 அக்2017
04:59
புதுடில்லி : தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், சொத்துமதிப்பீட்டாளராக பதிவு செய்து, அங்கீகாரத்துடன் தொழில் செய்வதற்கான அரசாணையை, மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.இதன்படி, ஐ.பி.பி.ஐ., எனப்படும், இந்திய திவால் ஒழுங்குமுறை வாரியத்தில், மதிப்பீட்டாளராக பதிவு செய்து, ஒரு நிறுவனத்தின் சொத்துகள், பங்குகள், கடன் பத்திரங்கள், கடன்கள் உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்யும் தொழிலில் ஈடுபடலாம்.இவ்வாறு பதிவு செய்வோர், அங்கீகாரம் பெற்ற, மதிப்பீட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பிலும், உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும்.மதிப்பீட்டாளர் பணிக்கான தகுதிகள், சொத்து மதிப்பீட்டு கல்வி திட்டம், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை தொடர்பான விதிமுறைகள், 2017ம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.தற்போது, சொத்து மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் ஆகியவை, 2018 மார்ச், 31க்குள், ஐ.பி.பி.ஐ.,யில் பதிவு செய்து, அங்கீகாரத்துடன் தொழில் செய்யலாம்.இந்த புதிய நடைமுறை, 18ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இருந்த போதிலும், ஏற்கனவே மதிப்பீட்டு சேவையில் ஈடுபட்டுள்ளோர், பதிவு செய்யாமலே, தொடர்ந்து தொழில் புரியலாம். அவர்கள், பதிவு செய்து கொள்வதற்கு, 2018 மார்ச் இறுதி வரை அவகாசம்உள்ளது.‘மதிப்பீட்டாளர் துறைக்கான கண்காணிப்பு மையமாக, ஐ.பி.பி.ஐ., அமைப்பை நியமிக்கும் அரசாணை, தனியே வெளியிடப்படும்’ என, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|