பதிவு செய்த நாள்
24 நவ2017
00:08
புதுடில்லி : இந்தியாவில், 1.30 லட்சம் பேருக்கு, புதிதாக அறிமுகமாகி வரும் தொழில்நுட்பங்களில் பயற்சி அளிக்கும் திட்டத்தை, ‘கூகுள் இந்தியா’ நிறுவனம் அறிவித்து உள்ளது.
இது குறித்து, இந்தியாவிற்கான, திறன் பயிற்சி பிரிவு தலைவர், வில்லியம் புளோரன்ஸ் கூறியதாவது: இந்தியாவில், கூகுள் நிறுவனம், 20 லட்சம் சாப்ட்வேர் டெவலப்பர்களை உருவாக்க உள்ளதாக, 2015ல் அறிவித்தது. அதன்படி, இதுவரை, 2.10 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு மேலும், 1.17 லட்சம் மாணவர்கள் பயிற்சியை முடிக்க உள்ளனர்.
இந்நிலையில், இத்திட்டத்தில், புதிய தொழில்நுட்பங்களில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கும் திட்டம், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில், செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர், கிளவுட் கம்ப்யூட்டிங், மெய்நிகர் செயல்பாடு, இயந்திர கல்வியியல், வலைதள மேம்பாடு போன்ற புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி பெற்றவர்கள், புதிய தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளை சுலபமாக பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|