பதிவு செய்த நாள்
19 ஜன2018
10:25
மும்பை : அந்நிய நாட்டு முதலீடுகளின் வருகை அதிகரித்திருப்பதாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் உயர்வின் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் (ஜன.,19) ஏற்றத்துடனேயே துவங்கி உள்ளன. காப்பீடு, வங்கிகள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளின் பங்கு மதிப்பு உயர்ப்துள்ளதை அடுத்து சென்செக்ஸ் உயர்வுடன் காணப்படுகிறது.
வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 130.58 புள்ளிகள் உயர்ந்து 35,390.87 புள்ளிகளாகவும், நிப்டி 25.25 புள்ளிகள் உயர்ந்து 10,842.25 புள்ளிகளாகவும் உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகள், ஜப்பான் பங்குச்சந்தைகள், ஹாங்காங் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. அதே சமயம் அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|