மோசடி நகை வியாபாரிகளிடம் ரூ.1790 கோடிகளை இழந்த பஞ்சாப் நேஷனல் வங்கிமோசடி நகை வியாபாரிகளிடம் ரூ.1790 கோடிகளை இழந்த பஞ்சாப் நேஷனல் வங்கி ... மியூச்­சுவல் பண்ட் முத­லீட்டின்  அவ­சியம் என்ன? மியூச்­சுவல் பண்ட் முத­லீட்டின் அவ­சியம் என்ன? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2018
11:32

புதுடில்லி : பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.11,300 கோடி அளவிற்கு கடன் வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். இந்த வங்கி மோசடியை தொடர்ந்து தினம் ஒரு வங்கியில் நடந்த மோசடி அம்பலமாகி வருகிறது.
இந்த வரிசையில் இன்று, ஓரியன்டல் வங்கியில் நகை வியாபாரி ஒருவர் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டில்லியைச் சேர்ந்த நகை வியாபாரி மோசடி செய்ததாக கடந்த 6 மாதங்களாக ஓரியன்டல் வங்கி அளித்து வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் சிபிஐ தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது.
டில்லியில் நகை வியாபாரம் செய்து வரும் சப்யா ஷேட், ரீடா ஷேட், கிருஷ்ணகுமார் சிங், ரவி குமார் சிங் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஓரியண்டல் வங்கியில் ரூ.390 கோடி அளவிற்கு கடன் பெற்று, மோசடி செய்ததாக கூறப்படுகிறது.கூட்டாக நகை வியாபாரம் செய்து வரும் இவர்கள் 4 பேரும் 2007 ம் ஆண்டு முதல் வங்கியில் கடன் வாங்கி வந்துள்ளனர்.
கடந்த 10 மாதங்களாக இவர்கள் 4 பேரையும் தொடர்பு கொள்ள முடியாததால் அவர்களை பற்றி வங்கி அதிகாரிகள் விசாரித்து வந்துள்ளனர். இவர்களில் சப்யா ஷேட் வெளிநாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து 2017 ம் ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் இவ்வங்கி, சிபிஐ.,யிடம் புகார் கூறி வந்துள்ளது. சப்யா ஷேட்டின் தொழில் கூட்டாளிகள் பலர் துபாய் இருப்பதும், அவர்களுடன் சப்யா ஷேட் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)