பதிவு செய்த நாள்
05 மார்2018
00:22
பி.எப்., நிதியை நிர்வகிக்கும், இ.பி.எப்.ஓ., அமைப்பு, உறுப்பினர்கள், 10 லட்சம் ரூபாய்க்கு மேலான தொகையை விலக்கிக் கொள்ள விண்ணப்பிக்கும் போது, ‘ஆன்லைன்’ மூலம் கோரிக்கையை தாக்கல் செய்வது கட்டாயம் என, அறிவித்துள்ளது.
பி.எப்., சேவைகளை காகிதமில்லாத பரிவர்த்தனை முறையில் அளிக்கும் நோக்கத்திற்கு ஏற்ப இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.பி.எப்., கணக்கில் உள்ள தொகையை விலக்கிக் கொள்ள தகுதி உடையவர்கள், இ.பி.எப்., இணையதளம் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம். எனினும் இதற்கு, யு.ஏ.என்., எனப்படும் நிரந்தர கணக்கு எண் மற்றும் தொடர்புடைய ஆதார் எண் அவசியம். யு.ஏ.என்., ஒருவரது பான் கார்டு, ஆதார் எண், கே.ஒய்.சி., ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இணையதளத்தில் நுழைந்தவுடன், ஆதார், பான் கார்டு எண், வங்கி கணக்கு விபரம் உள்ளிட்டவை சரியாக இருக்கின்றனவா என, உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன் பின், ஆன்லைன் சேவைகளில் இருந்து பணம் விலக்கல் (கிளைம்) தொடர்பான பகுதியை, ‘கிளிக்’ செய்ய வேண்டும். நான் விண்ணப்பிக்க விரும்புவது எனும் பகுதியில் இருந்து இதை அணுகலாம்.பொருத்தமான விண்ணப்பம் தோன்றியவுடன், தேவையான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் ஒரு முறை, ‘பாஸ்வேர்டு’ மூலம் விண்ணப்பம் சமர்ப்பிப்பதை உறுதி செய்யலாம்.
பி.எப்., அலுவலகம் சார்பில் தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின், உரிய தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். கோரிக்கையை சமர்ப்பித்த பின், அதன் முன்னேற்றத்தை, ‘டிராக் கிளைம் ஸ்டேடஸ்’ வசதி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|