பதிவு செய்த நாள்
13 மார்2018
14:46
மும்பை: சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காதவர்களுக்கான அபராத தொகையை, 75 சதவீதம் ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வங்கியாக ஸ்டேட் வங்கி திகழ்கிறது. இதில் 41 கோடி பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கி, வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச சேமிப்பு தொகையை வைத்து பராமரிக்க வேண்டும் என புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், இந்த அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிக்கை:
குறைந்த பட்ச இருப்பு தொகையை பராமரிக்காத, மெட்ரோ மற்றும் பெருநகர பகுதி வாடிக்கையாளர்களுக்கு வசூலிக்கப்பட்ட அபராத தொயைான ரூ.50 (ஜிஎஸ்டி தனி) ஆனது, ரூ.15 (ஜிஎஸ்டி தனி) ஆக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசூலிக்கப்பட்ட அபராத தொகையான ரூ.40 (ஜிஎஸ்டி தனி) முறையே ரூ.12 (ஜிஎஸ்டி தனி) மற்றும் ரூ.10 (ஜிஎஸ்டி தனி) ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாகவும், 25 கோடி பேர் பயன்பெறுவார்கள் எனவும் கூறியுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|