பதிவு செய்த நாள்
24 மார்2018
00:39
கோல்கட்டா : தனியார் துறையைச் சேர்ந்த, பந்தன் வங்கியின் பங்குகள், மார்ச், 27ல், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
பந்தன் வங்கி, மார்ச், 15 – 18ல், புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. இதற்கு, சில்லரை முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பங்குகள் வேண்டி, 14.6 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன. இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக, அதிகபட்ச பங்கு விலையில், 4,500 கோடி ரூபாய் திரட்டப்பட்டிருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, வங்கித் துறையில் மேற்கொள்ளப்பட்ட, மிகப்பெரிய பங்கு வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பந்தன் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மார்ச் 27ல், வங்கியின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறுங்கடன் நிறுவனமான, பந்தன் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு, 2014ல், ரிசர்வ் வங்கி, வங்கி உரிமம் வழங்கியது. இதையடுத்து, பந்தன் வங்கி உருவானது. இந்தியாவில், முதன்முதலாக, குறுங்கடன் துறையில் இருந்து, வங்கித் துறைக்கு வந்த பெருமை, பந்தன் வங்கிக்கு உண்டு.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|