பதிவு செய்த நாள்
24 மார்2018
00:39
மும்பை : அமெரிக்கா – சீனா நாடுகள் இடையே இறக்குமதி வரி விதிப்பு தொடர்பாக, வர்த்தகப் போர் மூண்டுள்ளது. அத்துடன், கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. இவற்றின் தாக்கம், நேற்று, சர்வதேச பங்குச் சந்தைகளில் எதிரொலித்தன.
இந்திய பங்குச் சந்தைகளில் மட்டும், பங்கு மதிப்பு சரிவால், முதலீட்டாளர்களுக்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, 409.73 புள்ளிகள் சரிந்து, 32,596.54 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 116.75 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 9,998.05 புள்ளிகளில் நிலை பெற்றது.
இக்குறியீடு, 2017, அக்.,11க்கு பின், முதன் முறையாக, 10 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவடைந்துள்ளது. நேற்று, ஐ.டி., துறையை தவிர்த்து, அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள், சரிவை கண்டன. ‘நிப்டி’ 10ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் குறைந்ததால், வரும் வாரம், மேலும் சரிவு காண வாய்ப்பு உள்ளது. இது, முதலீடு செய்ய சரியான சந்தர்ப்பம் என, வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|