பதிவு செய்த நாள்
25 மார்2018
00:54
புதுடில்லி: திட்டமிட்டபடி, ஏப்., 1ல், சரக்கு போக்குவரத்துக்கான, 'இ - வே' பில் அமலுக்கு வரும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த, 10ம் தேதி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஏப்., 1 முதல் மீண்டும், 'இ - வே' பில் திட்டத்தை அறிமுகப்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டது.வணிகர்கள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மேற்பட்ட மதிப்பில் அனுப்பும் சரக்குகளுக்கு, 'இ - வே' பில் அவசியமாகும்.இதை, சரக்கு போக்குவரத்தில், வரி அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது காட்ட வேண்டும். இதன் மூலம், சரக்கு போக்குவரத்தில் நடைபெறும் வரி ஏய்ப்புகள் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.முதற்கட்டமாக, மாநிலங்கள் இடையிலான சரக்கு போக்குவரத்தில், இத்திட்டம் அமலாகும். அதன் பின், ஏப்., 15ல், மாநிலங்களுக்குள் நடைபெறும் சரக்கு போக்குவரத்துக்கும் விரிவுபடுத்தப்படும். ஜூன் 1க்குள், நாடு முழுவதும், 'இ - வே' பில் முழுமையான செயல்பாட்டிற்கு வந்து விடும்.இக்கூட்டத்தில், நடப்பு, 2017- - 18ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலுக்கான கெடுவை, மார்ச், 31லிருந்து, ஜூன் வரை நீட்டிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்நிலையில், 'இ - வே' பில் நடைமுறை, ஏற்கனவே அறிவித்தபடி, ஏப்., 1ல் அமலுக்கு வருவதாக, நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன், 'ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் தொடர்பாக ஏற்கனவே அறிவித்த அவகாச காலத்திலும் மாற்றம் ஏதும் இல்லை' என, மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் கூறிஉள்ளது.அதனால், நிறுவனங்கள், அவற்றின் விற்பனை விபரங்களை, 'ஜி.எஸ்.டி.ஆர்., - 3பி' படிவத்திலும், இறுதி கணக்கு விபரங்களை, 'ஜி.எஸ்.டி.ஆர்., - 1' படிவத்திலும், ஜூன் இறுதி வரை தாக்கல் செய்யலாம்.
ஒரே படிவம் : சுஷில் குமார் மோடி தலைமையிலான, ஜி.எஸ்.டி., செயலாக்கக் குழு, வரி ஏய்ப்பை தடுக்கும் அம்சங்களுடன், ஒரே படிவத்தில் சுலபமாக, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|