பதிவு செய்த நாள்
25 மார்2018
00:54
புதுடில்லி: 'கனரா வங்கி, தேனா வங்கி உள்ளிட்ட, நான்கு பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய நிதித் துறை இணை அமைச்சர், ஷிவ் பிரதாப் சுக்லா, பார்லி.,யில் கூறியதாவது: கடந்த ஆண்டு, எஸ்.பி.ஐ., உடன் அதன் ஐந்து துணை வங்கிகளும், பாரதிய மகிளா வங்கியும் இணைக்கப்பட்டன. அதுபோல, பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி, தேனா வங்கி உள்ளிட்ட வங்கிகள் இணைக்கப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இணைப்பு தொடர்பாக, மத்திய நிதியமைச்சகத்திற்கு எந்த கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என, சம்பந்தப்பட்ட வங்கிகள் தெரிவித்துள்ளன.சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை, மத்திய நிதியமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வங்கிகள் இணைப்பு தொடர்பான பரிந்துரைகள் எதுவும் செய்யவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|