பதிவு செய்த நாள்
04 ஏப்2018
00:39
சென்னையில் வாளை கருவாடு சீசன் களைகட்டத் துவங்கியுள்ளது.சென்னையில் கருவாட்டு விற்பனைக்கு பெயர் பெற்ற மூலக்கொத்தளம் கருவாட்டு விற்பனை கடைகளில், வாளை வரத்து அதிகரித்துள்ளது. மீன்பிடி தடை காலம் துவங்கியுள்ளதாலும், அதைத் தொடர்ந்து வரும் ஆடி மாத சீசனாலும், கருவாடு விற்பனை சூடு பிடிக்கும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.கர்நாடகம், கேரளா, ஆந்திரா குறிப்பாக குஜராத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாளை கருவாடு வரத் துவங்கியுள்ளது. இதன் விலை ஒரு கிலோ,160 – 200 ரூபாய் வரை உள்ளது. வஞ்சிரம் கருவாடு ஒரு கிலோ, 600 – 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உப்பு சேர்த்தது, உப்பு இல்லாதது உள்ளிட்ட நான்கு வகை நெத்திலி கருவாடுகள் விற்பனைக்கு உள்ளன. இதில் ஒரு கிலோ, 400 ரூபாய் முதல் விற்பனைக்கு உள்ளது.வரத்து குறித்து கருவாட்டு வியாபாரிகள் கூறியதாவது:
மீன் வரத்து முன் போல் இல்லை. விற்காத மீன்கள் தான் கருவாடாகும். ஆனால் இப்போது நல்ல மீன்களையும் விலை கொடுத்து வாங்கி வந்து, கருவாடாக்க வேண்டியுள்ளது. மீனவர்கள் உதவியால், எந்த பகுதியில் எந்த மீன் வரத்து அதிகமுள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப தொழிலை நடத்தி வருகிறோம்.விற்காத கருவாடு, தென்னை மரத்திற்கு எருவாக பயன்படுத்தப்படும். இதை வாங்க கேரளாவில் இருந்து நிறைய பேர் இங்கு வருவர். ஆனால், இப்போது அவ்வாறான வியாபாரம் குறைந்து விட்டது. விற்பனைக்கு ஏற்ற அளவிலேயே கொள்முதல் செய்கிறோம். ஜூன் மாதம் வரை வாளை கருவாடு வரத்து அதிகம் இருக்கும். அதன் பின் கோலா மீன் வரத்து துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|