'ஏர்செல்' வாடிக்கையாளர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.,'ஏர்செல்' வாடிக்கையாளர்களை இழந்த பி.எஸ்.என்.எல்., ... மாற்­ற­மில்­லாத  காய்­கறி விலை மாற்­ற­மில்­லாத காய்­கறி விலை ...
'இந்தியாவால், 'சிலிக்கான் வேலி' உருவாக்க முடியும்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2018
00:52

புதுடில்லி:''புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும், தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த, அமெரிக்காவின் 'சிலிக்கான் வேலி' போல, இந்தியாவிலும் உருவாக்க முடியும்,'' என, உலக வங்கியின், இந்தியாவிற்கான இயக்குனர், ஜூனைத் கமல் அகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர், வளரும் நாடுகளின் கண்டுபிடிப்புகள் தொடர்பான, உலக வங்கியின் அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான்பிராசிஸ்கோ நகரில் உள்ள, 'சிலிக்கான் வேலி' பகுதி, புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் மையமாக விளங்குகிறது.அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவாலும் அதுபோன்றாக முடியும் என, நம்பிக்கை உள்ளது. அதற்கு, கண்டுபிடிப்புகளுக்கான சூழல் மற்றும் செயல் திட்டங்கள், மேலும் பரவலாக்கப்பட வேண்டும்.
உலகம் மாறி வருகிறது; நாம், வளர்ச்சியில் பல மடங்கு முன்னேற வேண்டும். குறைந்த நடுத்தர வருவாய் என்ற ஏணியில் இருந்து, உயர் வருவாய் பிரிவிற்கு முன்னேற வேண்டுமென்றால், கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.கண்டுபிடிப்புகள், உற்பத்தி உயர்வுக்கு இன்றியமையாதவை. ஒரு நிறுவனத்தின் தன்மை, திறன், கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கு இடையிலான உறவு, வலிமைமிக்கது.
இந்தியாவில், புதுமையான கண்டுபிடிப்புகளை பொறுத்தவரை, நிறுவனங்களின் வளர்ச்சியில் தொடர்ந்து தேக்க நிலை காணப்படுகிறது. இதை போக்க, கண்டுபிடிப்பு சூழலை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்
முதலீடு
உலக வங்கியின், சீரான வளர்ச்சி, நிதி மற்றும் நிறுவனங்கள் பிரிவின், தலைமை பொருளாதார நிபுணர், வில்லியம் எப்.மலேனி கூறியதாவது:வளரும் நாடுகளில், தேசிய கண்டுபிடிப்பு திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றவோ அல்லது புதிய பொருட்களின் போலிகளை உருவாக்கவோ செய்யப்படும் முதலீட்டை விட, பொருட்களை கண்டுபிடிக்கவோ அல்லது செயல்முறைகளிலோ மேற்கொள்ளும் முதலீடுகள், சிறிதளவே உயர்ந்துள்ளன.
ஒரு நாடு அல்லது ஒரு நிறுவனம், கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்யும் போது, அதற்கான தொழில்நுட்பங்கள், திறமையான பொறியாளர்கள், பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்து பெற வேண்டும்.அவ்வாறு செய்யாவிடில், முதலீடுகள் மீதான வருவாய் குறைவாகவே இருக்கும். துவக்கத்தில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் செய்யும் முதலீடுகள் மீதான வருவாய், அதிகமாக இருக்கும்.
அதே சமயம், இத்தகைய ஆய்வு மற்றும் மேம்பாடு சார்ந்த, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், முதலீட்டின் மீதான வருவாய் குறையும்.
ஒரு அரசு உருவாக்கும், தேசிய கண்டுபிடிப்பு திட்டம், பாரம்பரிய அமைப்புகள் மற்றும் கொள்கைகளை விட மேம்பட்டு, சந்தையில் சாதாரண கண்டுபிடிப்புகளுக்கு ஏற்படும் தோல்விகளை தவிர்ப்பதற்கான தீர்வுகளை வழங்கும் திறனை கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)