பதிவு செய்த நாள்
07 ஏப்2018
00:57
புதுடில்லி:‘நேர்மையற்ற முறையில் பங்கு வியாபாரம் புரிந்த வர்த்தகர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட, 14 ஆயிரத்து, 700க்கும் அதிகமானோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, செபி உறுப்பினர், மாதாபி புரி பச் கூறியதாவது:மும்பை பங்குச் சந்தையில், ‘ஸ்டாக் ஆப்ஷன்’ பிரிவில், 2014 ஏப்., – 2015 செப்., வரையிலான காலத்தில் நடைபெற்ற, முறையற்ற வர்த்தகம் குறித்து, செபி ஆய்வு மேற்கொண்டது.அதில், நேர்மையற்ற முறையில் வர்த்தகம் புரிந்ததாக, வர்த்தகர்கள், நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட, 14 ஆயிரத்து, 700 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவற்றில், முதற்கட்டமாக, 567 பேர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே காலத்தில், மும்பை பங்குச் சந்தையில், விதிகளை மீறி, மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டது தொடர்பாக, 59 நிறுவனங்களிடம் விசாரணை நடைபெற்றது.இதையடுத்து, 2015, ஆகஸ்டில், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட, 59 நிறுவனங்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இரண்டு நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டில், ஆதாரம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்நிறுவனங்களின் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது.
எஞ்சிய, 57 நிறுவனங்களுடன், வர்த்தகர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட, 14 ஆயிரத்து, 663 பேர் மீது, சட்ட நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.செயற்கையாக பங்கு விலையை உயர்த்தி, லாபமீட்டும் நிறுவனங்கள் மீது, அவற்றின் லாபத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல், ஒரே சீரான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|